இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் தமிழ் இளைஞன்!!

 


கிளிநொச்சி - வட்டக்கச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மென்பொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து சர்வதேச அளவில் சாதித்துவருகின்றார்.



குலேந்திரன் கோபீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு சாதனை செய்து வருகின்றார்.

 இவர், 2019 ஆம் ஆண்டு மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும்போது huex எனும் மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பித்து 30 பேருக்கு வேலை வாய்ப்பினைக்கொடுத்து  சர்வதேச அளவில் பல சேவைகளை வழங்கி வருகின்றார்.

கொழும்பில், கடந்த பெப்ரவரி மாதம்  இடம்பெற்ற உலகளாவிய மாணவர் தொழில்முனைவோர் விருதுப் போட்டியில்   (GSEA) தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று, அரையிறுதியிற்குத் தேர்வாகியிருந்தார்.

பின்னர், கடந்த 19 ஆம் திகதி huex, EO இலங்கை மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பூனே, இந்தியாவில் (Pune, India) நடைபெற்ற உலகளாவிய மாணவர் தொழில்முனைவோர் விருதுகளின் (GSEA) காலிறுதிப் போட்டியில் பங்குபற்றியிருந்தார்.

இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களுடன் போட்டியிட்டு, முதல் 3 பங்கேற்பாளர்களில் இடம்பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.    


இவருக்கு, தொழிநுட்பத்துறை சார்ந்த பலரும் சமூக ஆர்வலர்களும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,  தமிழ் இளைஞர்கள் பலரும்  இவ்வாறான துறைகளில் ஈடுபட்டு சர்வதேச அளவில் சாதனைகளைப்புரிய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo










கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.