பாகிஸ்தான் பிரஜை இலங்கை சிறையில் மரணம்!!
இலங்கையில் உள்ள அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்ட நிலையில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டார்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் பிரஜை திடீர் சுகவீனம் காரணமாக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
59 வயதான மொஹமட் நதீம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் 2019 ஓகஸ்டில் அவருக்கு எதிராக ஆயுள் தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை