சிறுமியைக் கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறை கோரிக்கை!!
கொழும்பில் சிறுமி ஒருவரை காணவில்லை என காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு - தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியொருவர் நேற்றையதினம் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த சிறுமி வீட்டிலிருந்து வெளியேறி தெமட்டகொட பகுதியிலிருந்து மாளிகாவத்தை செல்லும் வழியில் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் , காணாமல் போன சிறுயைக் கண்டுபிடிக்க உதவுமாறு தந்தை தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த காணாமல்போன சிறுமி தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் 077-3715446 மற்றும் 0761611667 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை