முன்னாள் வலிகாமம் சபை உறுப்பினர் மீது தாக்குதல்!

 


யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான புளொட் அமைப்பின் அங்கத்தவர் 44 வயதான சொக்கலிங்கம் சபேசன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்றைய தினம் (05-08-2023) இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுன்னாகம் ஐயனார் கோவில் பகுதியில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் புலம்பெயர் மக்களின் உதவியில் குழாய் கிணறு ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் அயல் வீட்டுக்காரர் குழாய் அமைத்ததால் தன்னுடைய வீட்டு கிணறு பாதிப்படைகின்றது என தெரிவித்து பிரதேச சபை உறுப்பினர் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளார்.


தாக்குதலில் காயமடைந்த பிரதேச உறுப்பினர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.