இலங்கை இராணுவப்படைக்கு புதிய யுக்தி!

மோப்ப நாய்களையும், அதிநவீன கருவிகளையும் பயன்படுத்த அதிகம் செலவாவதால் கீரிகளைப் பயன்படுத்த இலங்கை ராணுவம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் காணப்படும் சிவப்பு, சாம்பல் நிறத்திலான கீரிகள் இதற்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன. கீரிப்பிள்ளைக்கு முழுபயிற்சியளிக்க ஒரு வருடகாலம் தேவைப்படுவதாக இலங்கை ராணுவம் கூறுகிறது.

மறைத்து வைக்கப்படும் வெடிபொருட்களை பயிற்சி அளிக்கப்பட்ட கீரிகள் மோப்ப சக்தியால் கண்டுபிடிக்கும். வெடிபொருட்களைத் தோண்டி எடுக்கும் சக்தியும் கீரிகளுக்கு உண்டு.

இது ஆபத்தானது என்பதால் இடத்தை அடையாளம் காட்ட மட்டுமே தற்போது கீரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வெடிபொருட்களைக் கண்டுபிடிப்பதில், மோப்ப நாய்களைவிடவும் கீரிகள் சிறப்பாக செயல்படுவதாக இலங்கை ராணுவம் கூறுகிறது.

காடுகளில் இருந்து பிடிக்கப்பட்ட கீரிகளுக்கு தற்போது பயிற்சியளிக்கப்படுகிறது. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படுவதைப் போல இந்த கீரிகளுக்கும் எண்கள் வழங்கப்பட்டு, பெயரிடப்பட்டுள்ளது.

சாம்பல் நிற கீரிக்கு மோப்ப சக்தி அதிகம் என்பதால், வெடிபொருட்களைக் கண்டறிவதில் சிறப்பாக செயல்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.