வடக்கில் புலிகளை நினைவு கூருவதை ஏற்றுக் கொள்ள முடியாது! - மகிந்த அணி
புலிகளை நினைவேந்திய வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பன்னாட்டுச் சமூகத்துக்கு முன்வைத்த கருத்தை மைத்திரியும், ரணிலும் ஏற்றுக் கொள்கின்றனரா ?
வடக்கில் புலிகளை நினைவு கூரும் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கியமை, நினைவுத்தூபி அமைத்தமை என்பன அரசின் ஒத்துழைப்புடன் இடம்பெறுகின்றனவா என்பதை உடனடியாக நாட்டு மக்களுக்கு கூற வேண்டும்.
வடக்கின் நிலமைகளை எந்த வகையிலேனும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரச தலைவர் உடனடியாக வடக்கு மாகாண சபையை கலைத்து நாட்டின் அமைதியைச் சீரழிக்கும், பிரிவினையைத் தூண்டும் விக்கினேஸ்வரன் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று மகிந்த அணியினர் வலியுறுத்தியுள்ளனர்.
மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இது தொடர்பில் தெரிவித்ததாவது, வடக்கு விவகாரத்தில் மைத்திரியும், ரணிலும் வாய் திறக்காது அமைதி காத்தால் இந்த நாடு மீண்டும் தீப்பற்றி எரியக்கூடிய நிலமை ஏற்படும்.
பயங்கரவாதிகளை கொண்டாடும், அவர்களுக்காக நினைவேந்தல் நடத்தும் உலகின் ஒரே ஒரு நாடு இலங்கை மட்டுமேயாகும்.
பிரபாகரனுக்கு மரியாதை செலுத்தி போரை முடித்த மகிந்த ராஜபக்சவை கள்வன் என்று கூறுகின்றனர்.
அரசு இன்று பிரிவினைவாதிகளின் பக்கம் நின்றே தீர்மானம் எடுக்கின்றது. அரசைச் சாடுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. மக்கள் அடுத்த கட்டமாக என்ன தீர்மானம் எடுக்கப்போகின்றனர் என்பதே முக்கியமானதாகும்
என்றார்.
வடக்கில் தமிழ் பிரிவினைவாதம், கிழக்கில் முஸ்லிம் பிரிவினைவாதம் என்று நாட்டின் மக்களை நாசமாக்கும் சக்திகளை அரசு உருவாக்கியுள்ளது. வடக்கு மாகாண முதலைமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர் இன்று முன்வைக்கும் கருத்துக்கள் மிகவும் பாரதூரமானவை.
வடக்கு கிழக்கு தனி இராஜ்ஜியம் உருவாக்கப்படுவது, பன்னாட்டுத் தலையீடுகள், இராணுவத்தை வெளியேற்றுவது போன்ற கருத்துக்களை அவர்கள் தைரியமாக முன்வைக்கக் கூடிய நிலைமையை இன்று அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் புலிகளை நினைவு கூரவும் நினைவுத்தூபி அமைக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாடுகள் அனைத்தையும் மைத்திரியும், ரணிலும் வேடிக்கை பார்க்கின்றனர்.
புலிகள் வடக்குக்கு தேவை என்ற கருத்துக்களை வெளிப்படையாக கூறும் நிலைமை வடக்கில் உருவாகியுள்ளது. வடமாகாண சபையில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது.
பாடசாலைகளில், கடைகளில், வீடுகளில் புலிகளை நினைவு கூறும் செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கின் நிலைமைகளை எந்த வகையிலேனும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
வடக்கில் புலிகளை நினைவு கூரும் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கியமை, நினைவுத்தூபி அமைத்தமை என்பன அரசின் ஒத்துழைப்புடன் இடம்பெறுகின்றனவா என்பதை உடனடியாக நாட்டு மக்களுக்கு கூற வேண்டும்.
வடக்கின் நிலமைகளை எந்த வகையிலேனும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரச தலைவர் உடனடியாக வடக்கு மாகாண சபையை கலைத்து நாட்டின் அமைதியைச் சீரழிக்கும், பிரிவினையைத் தூண்டும் விக்கினேஸ்வரன் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று மகிந்த அணியினர் வலியுறுத்தியுள்ளனர்.
மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இது தொடர்பில் தெரிவித்ததாவது, வடக்கு விவகாரத்தில் மைத்திரியும், ரணிலும் வாய் திறக்காது அமைதி காத்தால் இந்த நாடு மீண்டும் தீப்பற்றி எரியக்கூடிய நிலமை ஏற்படும்.
பயங்கரவாதிகளை கொண்டாடும், அவர்களுக்காக நினைவேந்தல் நடத்தும் உலகின் ஒரே ஒரு நாடு இலங்கை மட்டுமேயாகும்.
பிரபாகரனுக்கு மரியாதை செலுத்தி போரை முடித்த மகிந்த ராஜபக்சவை கள்வன் என்று கூறுகின்றனர்.
அரசு இன்று பிரிவினைவாதிகளின் பக்கம் நின்றே தீர்மானம் எடுக்கின்றது. அரசைச் சாடுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. மக்கள் அடுத்த கட்டமாக என்ன தீர்மானம் எடுக்கப்போகின்றனர் என்பதே முக்கியமானதாகும்
என்றார்.
வடக்கில் தமிழ் பிரிவினைவாதம், கிழக்கில் முஸ்லிம் பிரிவினைவாதம் என்று நாட்டின் மக்களை நாசமாக்கும் சக்திகளை அரசு உருவாக்கியுள்ளது. வடக்கு மாகாண முதலைமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர் இன்று முன்வைக்கும் கருத்துக்கள் மிகவும் பாரதூரமானவை.
வடக்கு கிழக்கு தனி இராஜ்ஜியம் உருவாக்கப்படுவது, பன்னாட்டுத் தலையீடுகள், இராணுவத்தை வெளியேற்றுவது போன்ற கருத்துக்களை அவர்கள் தைரியமாக முன்வைக்கக் கூடிய நிலைமையை இன்று அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் புலிகளை நினைவு கூரவும் நினைவுத்தூபி அமைக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாடுகள் அனைத்தையும் மைத்திரியும், ரணிலும் வேடிக்கை பார்க்கின்றனர்.
புலிகள் வடக்குக்கு தேவை என்ற கருத்துக்களை வெளிப்படையாக கூறும் நிலைமை வடக்கில் உருவாகியுள்ளது. வடமாகாண சபையில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது.
பாடசாலைகளில், கடைகளில், வீடுகளில் புலிகளை நினைவு கூறும் செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கின் நிலைமைகளை எந்த வகையிலேனும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை