ஊடகவியலாளர்கள் வெடி பொருட்கள் அகழ்வு இடத்திற்கு அனுமதிக்கப்படாதது ஏன்?

வவுனியா கூமாங்குளம் நூலக வீதியிலுள்ள சின்னம்மன் கோவிலுக்கு முன்பாக சுற்றுமதில் அமைக்கப்பட்ட காணி ஒன்றில் பெருமளவு வெடி பொருட்கள் காணப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் நேற்று மாலை  மாலை வவுனியா நீதிமன்றத்தின் அனுமதியுடன் அப்பகுதியில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.


இவ்வாறு அகழ்வுப்பணிகளை மேற்கொள்வதற்கு பொலிஸார், கடற்படையினர், கிராம சேவையாளர், எனப்பலரும் அங்கு சமூகமளித்துள்ள நிலையில் அகழ்வுப்பணி இடம்பெறும் பகுதிக்கு ஊடகவியலாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கடந்த காலங்களில் வவுனியாவில் பல பகுதிகளில் இவ்வாறு வெடி பொருட்களை தேடும் பணிகள் படையினரால் இடம்பெற்றிருந்தபோதிலும் அங்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர் எனினும் நேற்று இடம்பெற்ற அகழ்வுப்பணிகள் மிகவும் இரகசியமான முறையில்  மேற்கொள்வதானது சந்தேகத்தை தோற்றுவிப்பதாக உள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.