ஊடகவியலாளர்கள் வெடி பொருட்கள் அகழ்வு இடத்திற்கு அனுமதிக்கப்படாதது ஏன்?
இவ்வாறு அகழ்வுப்பணிகளை மேற்கொள்வதற்கு பொலிஸார், கடற்படையினர், கிராம சேவையாளர், எனப்பலரும் அங்கு சமூகமளித்துள்ள நிலையில் அகழ்வுப்பணி இடம்பெறும் பகுதிக்கு ஊடகவியலாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கடந்த காலங்களில் வவுனியாவில் பல பகுதிகளில் இவ்வாறு வெடி பொருட்களை தேடும் பணிகள் படையினரால் இடம்பெற்றிருந்தபோதிலும் அங்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர் எனினும் நேற்று இடம்பெற்ற அகழ்வுப்பணிகள் மிகவும் இரகசியமான முறையில் மேற்கொள்வதானது சந்தேகத்தை தோற்றுவிப்பதாக உள்ளது.
கருத்துகள் இல்லை