முல்லைத்தீவில் கனிய மணல் அகழ்வதற்கு வடமாகாணசபையில் எதிா்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் பெருமளவு கனிய மணலை அகழ்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் நிலையில், அதனை நிறுத்துமாறு கோரி வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி, பிரதமருக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளது.


வடமாகாணசபையின் 124வது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி தீர்மானத்திற்கான பிரேரணையை சபைக்கு சமர்பித்த மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சபையில் கருத்து கூறுகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய எல்லை கிராமங்களிலிருந்து 1984ம் ஆண்டு மக்கள் வெ ளியேற்றப்பட்டார்கள். பின்னர் மக்கள் மீள்குடியேறியபோது மக்களுடைய காணிகள் பறிபோயிருந்தன. அப்போது கொக்கிளாய் கிராமத்தில் சுமார் 44 ஏக்கர் நிலத்தை அபகரித்து

இல்மனைட் அகழ்வுக்கான பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து கிராம மக்கள் இராணுவ அழுத்தங்களுக்கும் மத்தியில் போராட்டங்களை நடாத்தியிருந்தார்கள். அப்போது நிறுத்தப்பட்ட கனியமணல் அகழ்வு நடவடிக்கைகள் 9 வருடங்கள் கழித்து

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக 2018.0 6.01ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபன அதிகாரிகள் கூட்டம் ஒன்றை நடாத்தியிருக்கின்றார்கள்.

இந்த கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் எவரும் அழைக்கப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட செயலருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அந்த கூட்டத்தை தாம் ஒழுங்கமைக் கவில்லை. இடத்தை மட்டுமே தான் கொடுத்துள்ளதாக கூறியிருக்கின்றார்.

மேலும் மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படாமை குறித்து தான் கூட்டத்தில் கேட்டதாகவும் அவர்களுக்கும் பின்னர் கூட்டம் ஒன்று நடாத்தப்படும் என கூறப்பட்டதாகவும் மாவட்ட செய லர் கூறியிருக்கின்றார்.

இந்நிலையில் மேற்படி கூட்டத்தில் கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான மிக நீண்ட பகுதியில் சுமார் 1 மீற்றர் ஆழத்திற்கு கனியமணல் அகழப்படவுள்ள தாக அறியக்கிடைக் கிறது. இதனால்  மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள்

இலகுவாக கடல்நீரானது உட்புகும் ஆபத்து உள்ளது. சாதாரணமாகவே கடல் பெருக்கெடுக் கும் காலங்களில் மேற்படி எல்லை கிராமங்களில் கடல் நீர் உட்புகுவது வழமை இவ்வாறா ன நிலையில் கரையோரங்களில் மணலும் அகழப்பட்டால்

பாதிப்பு மேலும் அதிகமாகும் வாய்ப்புக்கள் உள்ளன. எனவே இந்த வள கொள்ளை தொடர்பாக வடமாகாணசபை உரிய நடவடிக்கை எடுத்தாகவேண்டும் என்றார். இதனையடுத்து மேற்படி கனிய மணல் அகழ்வு உடனடியாக நிறுத்தப்படவேண்டும்

என சபை தீர்மானம் எடுத்துள்ளதுடன், மேற்படி விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரினது கவனத்திற்கும் கொண்டுசெல்வதென தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.