இலங்­கையில் முதன்முறையாக விமானம் தயா­ரிக்க நடவடிக்கை

இலங்­கையில் முதன்­மு­றை­யாக  விமானம்  தயா­ரிக்கும்  நட­வ­டிக்­கைகள்  மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளதுடன் இந்த வருட இறு­திக்குள் இதன் ஆரம்பப் பணிகள்  மேற்­கொள்­ளப்­படும் என விமானப் படைத் தள­பதி எயார் மார்ஷல் கபில ஜயம்­பதி தெரி­வித்தார்.
கண்டி ஸ்ரீ தலதா  மாளி­கைக்கு விஜயம் செய்த இவர் கபில ஜயம்­பதி புனித புத்த  தந்­தத்தை தரி­சித்து  ஆசிர்­வாதம்  பெற்­றுக்­கொண்ட பின்னர்  திய­வ­தன நிலமே  நிலங்க தேவ­வுடன்  கலந்­து­ரை­யா­டி­ய­போது இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்ததாவது, முதலில் சிறிய ரக விமானம் தயா­ரிக்கும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­படும். இது முதலில் இரண்டு பய­ணிகள் செல்­லக்­கூ­டிய  சிறிய ரக வகையில் அமையும். அது­மட்­டு­மன்றி, மிக இல­கு­வாக குறைந்த விலையில்   இவ்­வி­மா­னத்தைப் பெற்­றுக்­கொள்ள  முடியும்.

 இதனைத் தயா­ரிப்­ப­தற்­கான சிறப்பு மத்­திய நிலையம் இரத்மலானை பிரதேசத்தில் அமையவுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.