“இடிபடும் கோட்டைகள்”- நாவல் வெளியீடு
மூத்த படைப்பாளர் நா. யோகேந்திரன் எழு திய “இடிபடும் கோட்டைகள்” நாவல் நேற்று சனிக்கிழமை 11 ஆம் திகதி நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் வெளியிடப்பட்டது.
நூல் வெளியீட்டுக்கு முதன்மை விருந்தினர் க ளான நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும், யாழ்ப்பாண மாவட்ட செயலர் நா.வேதநாயகனும் கலந்து கொண்டனர்.
இந்த நூல் வெளியீடு 1950- – 1960 வரையான காலப்பகுதியில் எமது மண்ணில் நிலவிய சமூகப் பண்பாட்டு வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியப் படைப்பாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வாழ்த்துரை நிகழ்த்தினார்.
“அனைவராலும் எழுத முடியாது. எழுதுபவர்களை ஊக்குவிக்க வேண்டும். பல எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். இளையவர்கள் தற்போது வாசிப்பது குறைவு. இளைஞர்களின் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும். அரசியலோடு சேர்ந்து அனைத்தையும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் “ என்று அவர் தனது வாழ்த்துரையில் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் வாழ்த்துரை நிகழ்த்தினார். எழுத்தாளருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த மாவட்டச் செயலர் அவருடைய பணி மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
நிகழ்வில் வடமாகாண கலை பண்பாட்டுச் செயலாளர் சத்திய சீலன், எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நூல் வெளியீட்டுக்கு முதன்மை விருந்தினர் க ளான நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும், யாழ்ப்பாண மாவட்ட செயலர் நா.வேதநாயகனும் கலந்து கொண்டனர்.
இந்த நூல் வெளியீடு 1950- – 1960 வரையான காலப்பகுதியில் எமது மண்ணில் நிலவிய சமூகப் பண்பாட்டு வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியப் படைப்பாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வாழ்த்துரை நிகழ்த்தினார்.
“அனைவராலும் எழுத முடியாது. எழுதுபவர்களை ஊக்குவிக்க வேண்டும். பல எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். இளையவர்கள் தற்போது வாசிப்பது குறைவு. இளைஞர்களின் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும். அரசியலோடு சேர்ந்து அனைத்தையும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் “ என்று அவர் தனது வாழ்த்துரையில் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் வாழ்த்துரை நிகழ்த்தினார். எழுத்தாளருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த மாவட்டச் செயலர் அவருடைய பணி மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
நிகழ்வில் வடமாகாண கலை பண்பாட்டுச் செயலாளர் சத்திய சீலன், எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை