அரசியல் பின்னணியே குள்ள மனிதர்கள் என்பது இல்லாத விடயம்!
அராலி, வட்டுக்கோட்டைப் பகுதிகளில் குள்ளமனிதர்களால் தாம் தாக்கப்படுகின்றோம் என்று அந்தப் பகுதி மக்கள் கூறுவது பொய் என்றும் அப்படி இல்லாத விடயங்களைப் பத்திரிகைகள் பிரசுரிப்பதற்கு அரசியல் பிண்ணணிகள் இருக்கும் என்று பொலிஸார் நம்புகின்றனர். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நேற்றுத் தெரிவித்தார்.
வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாண்டோ, யாழ்ப்பாண மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாண்டோ, உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர்.யாழ்ப்பாணத்தில் அகரித்துவரும் குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தச் சிறப்புச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது:
பத்திரிகையில் பல விடயங்கள் கூறப்பட்டிருப்பது தொடர்பபாகப் பொலிஸாரிடம் கேட்கப்பட்டது. குள்ளமனிதர்கள் வந்தார்கள் என்று நேரில் கண்டவர்கள் ஒருவராவது இல்லை. ஒருவராவது வந்து நான் கண்டேன் என்று சொல்லவில்லை.
முறைப்பாடுகள் வழங்குவதற்கு யாரும் முன்வரவுமில்லை. இதற்கு அரசியல் பின்னணிகள் இருப்பதாகவே கூறப்படுகிறது. பத்திரிகைகள் இல்லாத விடயங்களை வெளியிடுவதற்கு அரசியல் பிண்ணணிகள் இருக்கும் என்று பொலிஸார் நம்புகின்றனர்.
இந்தச் சந்திப்பில் மணல் கடத்தலைத் தடுப்பது, போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் எனப் பலவிடயங்களும் பேசப்பட்டது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். சந்திப்பில் வடக்கு மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், க. சசர்வேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
வடக்கு மாகாண சபையின் தற்காலிக அமைச்சர்களான நால்வருக்கும் இந்தச் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் ஏனைய இருவரும் கலந்துகொள்ளவில்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாண்டோ, யாழ்ப்பாண மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாண்டோ, உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர்.யாழ்ப்பாணத்தில் அகரித்துவரும் குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தச் சிறப்புச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது:
பத்திரிகையில் பல விடயங்கள் கூறப்பட்டிருப்பது தொடர்பபாகப் பொலிஸாரிடம் கேட்கப்பட்டது. குள்ளமனிதர்கள் வந்தார்கள் என்று நேரில் கண்டவர்கள் ஒருவராவது இல்லை. ஒருவராவது வந்து நான் கண்டேன் என்று சொல்லவில்லை.
முறைப்பாடுகள் வழங்குவதற்கு யாரும் முன்வரவுமில்லை. இதற்கு அரசியல் பின்னணிகள் இருப்பதாகவே கூறப்படுகிறது. பத்திரிகைகள் இல்லாத விடயங்களை வெளியிடுவதற்கு அரசியல் பிண்ணணிகள் இருக்கும் என்று பொலிஸார் நம்புகின்றனர்.
இந்தச் சந்திப்பில் மணல் கடத்தலைத் தடுப்பது, போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் எனப் பலவிடயங்களும் பேசப்பட்டது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். சந்திப்பில் வடக்கு மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், க. சசர்வேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
வடக்கு மாகாண சபையின் தற்காலிக அமைச்சர்களான நால்வருக்கும் இந்தச் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் ஏனைய இருவரும் கலந்துகொள்ளவில்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை