யாழில் சாதனை படைத்த மாணவியின் எதிர்கால ஆசை!


கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் யாழ் மாணவி தேசிய ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியை சேர்ந்த மிருனி சுரேஷ்குமார் என்ற மாணவியே அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார். எதிர்காலத்தில் தான் ஒரு வைத்தியராக மாறி வடமாகாணத்தில் சேவையாற்ற வேண்டும் என மாணவி மிருனி தெரிவித்துள்ளார். தனது விடாமுயற்சியே இந்த சாதனைக்கு காரணம் என மாணவி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவரும் விடா முயற்சியுடன் அர்ப்பணிப்புடன் உழைத்தால் முன்னேறலாம் எனத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகின. பெறுபேறுகளின் அகில இலங்கை ரீதியில் ஆறு மாணவ, மாணவிகள் முதலிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.