போதையற்ற கிராமமாக எழுதுமட்டுவாழ் படித்த மகளிர் குடியேற்றத்திட்டம்!
தென்மராட்சி பிரதேசத்தின் எழுதுமட்டுவாழ் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள படித்த மகளிர் குடியேற்றத்திட்டக் கிராமம் போதையற்ற கிராமமாகப் பிரதேச செயலகத்தினால் இனங்காணப்பட்டு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கிராமத்தில் வாழும் பெரும்பாலான குடும்பங்கள் போதைக்கு அடிமையாகாத நிலை காணப்பட்டதால் கிராமத்தில் முழுமையாக போதைப் பாவனையை இல்லாமல் செய்து பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு பிரதேசத்தின் முன்னோடிக் கிராமமாக மாற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான கலந்துரையாடல் எ ழுதுமட்டுவாழ் வடக்கு கிராம பிரிவு அலுவலகத்தில் பிரதேச செயலர் தேவந்தினி பாபு தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொது சுகாதாரப் பரிசோதகர் கிராம மட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பிர தேச செயலக அலுவலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை