நந்திக்கடலிலிருந்து இராணுவ கண்காணிப்பு முகாம் அகற்றப்பட்டது!

முல்லைத்தீவு -வட்டுவாகல்  நந்திக்கடல் பகுதியில் உள்ள இராணுவ கண்காணிப்பு முகாம் மற்றும் உணவகம் என்பன இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளது .

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது வட்டுவாகல் பகுதியை கைப்பற்றிய இராணுவத்தினர் முல்லைத்தீவு-பரந்தன் பிரதான வீதிப் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக குறித்த முகாமை நந்திக்கடல் பகுதியில் அமைத்திருந்ததோடு உணவகம் ஒன்றினையும் அமைத்திருந்தனர்.

இந்த நிலையில், 9 வருடங்களின் பின்னர் இந்த கண்காணிப்பு முகாம் இராணுவத்தினரால் நேற்றையதினம்  அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.