இலங்கையில் பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகம் ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கள மொழியில் வெளியிடப்படும் சில தகவல்கள் ஊடாக இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
4ஆம் திகதி பேஸ்புக் நிறுவன பிரதிநிதிகளுடன் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் தடைப்பட்ட நிலையில், அவ்வாறான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படும் போது இலங்கையில் பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகத்தை திறப்பது தொடர்பில் தீர்மானிக்கபடும் என்று ஜனாதிபதியின் செயலாளரும், தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளருமான ஒஸ்டின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை