சிங்­கள மாண­வர்­கள் ஏதோ ஒரு பின்­பு­லத்­தில் செயற்படுகிறார்கள்!

என்ன நடந்­தா­லும் பர­வா­யில்லை புத்­தர் சிலையை அமைத்தே தீரு­வோம் என்று பிடி­வா­த­மாக நின்­ற­வர்­கள் ஒரு சில சிங்­கள மாண­வர்­களே. ஏதோ ஒரு பின்­பு­லத்­தில் தான் அவர்­கள் இத்­த­கைய செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ள­னர்.
இவ்­வாறு யாழ்ப்­ப­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் வவு­னியா வளாக முதல்­வர் த.மங்­க­ளேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.
வவு­னியா வளாக சிங்­கள மாண­வர்­க­ளால் புத்­தர் சிலை அமைக்க முன்­னெ­டுக்­கப்­பட்ட முயற்­சி­க­ளின் பின்­னர் ஏற்­பட்ட சம்­ப­வங்­கள் தொடர்­பில் அவர் நேற்று ஊட­கங்­க­ளுக்­குத் தெளி­வு­ப­டுத்­தி­னர். அதன்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார். அவர் தெரி­வித்­தா­வது-,
கடந்த சனிக்­கி­ழமை வவு­னியா வளா­கத்­தின் விடு­திப் பகு­திக்கு ஒரு சில மாண­வர்­க­ளால் புத்­தர் சிலை வைப்­ப­தற்­கான கூடு ஒன்று கொண்­டு­வ­ரப்­பட்­டது.
அனைத்து மதங்­க­ளுக்­கும் உரிய வணக்­கத் தலங்­களை அமைப்­ப­தற்­கு­ரிய நிரந்­த­ர­மான திட்­டத்­துக்­காக நிலம் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. அங்­கேயே வணக்­கத் தலங்­களை அமைக்க முடி­யும்.
விடு­திப் பகு­தி­யில் இடம் போதா­துள்­ள­து­டன், இந்த நட­வ­டிக்­கை­யால் மாண­வர்­க­ளுக்கு இடை­யில் ஒரு குழப்­ப­மான சூழ்­நிலை ஏற்­ப­டும் என்­ப­தைக் கருத்­தில் கொண்­டும் முயற்­சி­யைக் கைவிட வேண்­டும் என்று நாம் மாண­வர்­க­ளுக்­குக் கூறி­னோம்.
அவர்­கள் எங்­கள் கோரிக்­கையை செவி­ம­டுக்­கா­மல் தாம் அங்கு தொடர்ந்து வைத்­தி­ருப்­போம் என்று கூறி­னர். நேற்று (நேற்று முன்­தி­னம்) எமது நிர்­வா­கம் கூடி முடி­வெ­டுத்­த­தன்­படி அந்­தக் கூட்டை நாம் எமது கட்­டுப்­பா­டில் எடுத்து வந்­தோம். எமது உத்­தி­யோ­கத்­தர்­க­ளைப் பின்­தொ­டர்ந்து வந்த மாண­வர்­கள் அவர்­களை வழி­ம­றித்து முரண்­பட்­ட­னர்.
துறைத் தலை­வர்­கள், பீடா­தி­ப­தி­கள் அனை­வ­ரும் அந்த இடத்­துக்­குச் சென்று மாண­வர்­க­ளு­டன் பேசி­யி­ருந்­த­னர். அவர்­கள் எம்மை மதிக்­கா­மல் முரண்­பட்­ட­து­டன் எம்மை தாக்­க­வும் முயன்­ற­னர்.
எனி­னும் நாம் அந்­தக் கூண்டை எமது கட்­டுப்­பாட்­டுக்­குள் வைத்­தி­ருந்­த­து­டன், வணக்­கத்­த­லம் நிரந்­த­ர­மாக அமைக்­க­கும் பொழுது அதை மீண்­டும் வழங்­கு­வோம் என்று அவர்­க­ளுக்­குக் கூறி இருக்­கி­றோம்.
இது தொடர்­பாக வளாக மாண­வர் ஒன்­றி­யத் தலை­வ­ரு­டன் நாம் பேசி­னோம். இது தொடர்­பா­கத் தனக்­குத் தெரி­யாது என்­றும் எமக்­கும் இந்­தச் செயற்­பாட்­டுக்­கும் சம்­பந்­தம் இல்லை என்­றும் ஒன்­றி­யத்­த­லை­வர் கூறி­னார்.
அதன்­பின்­னர் நாம் விசா­ரித்­தோம். ஒரு நான்கு மாண­வர்­களே இதை முன்­னின்று செயற்­ப­டுத்­தி­யுள்­ள­னர். நீங்­கள் எம்­மைப் பல்­க­லைக் கழ­கத்தை விட்டு வெளி­யில் அனுப்­பி­னா­லும் பர­வா­யில்லை, நாம் என்­ன­வும் செய்­வோம் என்று அவர்­கள் நிர்­வா­கத்­துக்கு அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள்.
இந்­தச் செயற்­பாடு ஒரு பின்­ன­ணி­யு­டன் நடத்­தப்­ப­டு­கின்­றது என்றே எமக்­குத் தெரி­கி­றது. பல்­க­லைக்­க­ழக சமூ­கத்­துக்­குள் ஒரு குழப்ப நிலை உரு­வா­கு­வ­தைக் கருத்­தில் கொண்டு அனைத்­துக் கல்­விச் செயற்­பா­டு­க­ளை­யும் கால­வ­ரை­யின்றி மூடி­யுள்­ளோம்.-என்­றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.