மே 18 தொடர்பாக திங்கட்கிழமை வடக்கு மாகாண சபை­யி­னர் ஆராய்வு!

மே 18 முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்வை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் குறித்து வடக்கு மாகாண சபை­யி­னர் நாளை­ம­று­தி­னம் திங்கட்கிழமை ஆரா­ய­வுள்­ள­னர்.
கைத­டி­யி­லுள்ள முத­ல­மைச்­ச ­ரின் அமைச்­சில் முற்­ப­கல் 10 மணிக்கு இது தொடர்­பில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது. மாகாண சபை­யின் அவைத் தலை­வர், அமைச்­சர்­கள் மற்­றும் உறுப்­பி­னர்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் அழைப்பு விடுத்­துள்­ளார்.
கடந்த சில வரு­டங்­க­ளாக வடக்கு மாகாண சபையே முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை ஏற்­பாடு செய்து நடத்­தி­வ­ரு­கி­றது. வழ­மை­போன்று இந்த முறை­யும் அது தொடர்­பில் ஒழுங்­கு­களை மேற்­கொள்ள இந்­தக் கலந்­து­ரை­யா­டல் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை, முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை அனை­வ­ரும் ஒரு­மித்து ஒரே இடத்­தில் நினை­வு­கூர வேண்­டும் என்று யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யம் மீண்­டும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.
அன்று மதி­யம் 12.30க்கு பொதுச்­சு­டர் ஏற்­றப்­பட்டு நினை­வேந்­தலை நடத்­து­வது என்­றும் தொடர்ந்து அஞ்­சலி இடம்­பெ­றும் என்­றும் அவர்­கள் நேற்று விடுத்த ஊடக அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ள­னர். அனை­வ­ரும் எந்­த­வித பாகு­பா­டு­மின்றி அதில் கலந்­து­கொள்­ள­வேண்­டும் என்­றும் அவர்­கள் அறிக்­கை­யில் கோரி­யுள்­ள­னர்.
இது­த­விர, நினை­வேந்­தலை ஓரி­டத்­தில் ஒற்­று­மை­யாக நடத்த ஒத்­து­ழைக்­கு­மாறு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் விடுத்த கோரிக்­கை­யைத் தாம் ஏற்­றுக்­கொள்­வ­தா­க­வும் நினை­வேந்­தல் நிகழ்வை பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளு­டன் இணைந்து நடத்­து­வ­தற்கு தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி மற்­றும் அகில இலங்கை தமிழ் காங்­கி­ரஸ் கட்­சி­கள் தீர்­மா­னித்­துள்­ளன என்று முன்­ன­ணி­யின் செய­லா­ளர் செ.கஜேந்­தி­ரன் விடுத்த செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.