வடக்கில் மருத்துவர்களின் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

வட மாகாண த்தில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் புதிதாக ஒசுசல நிலையங்களை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் வைத்திய துறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் சுகாதார அமைச்சில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் வைத்தியசாலைகளின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் தனக்கு தனித்தனி அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, தெற்கில் எல்பிட்டிய, பலபிட்டிய,கராபிட்டி, கொடகம ஆகிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அமைச்சர் இக்கூட்டத்தின்போது அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.