வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் !

நாளை மறுதினம் கூடவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக மாறும் என தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேர் கொண்ட குழு தெரிவித்துள்ளது.

 அந்த குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி இதனை தெரிவித்துள்ளார் அன்றையதினம் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திலிருந்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகுமா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதவி நிலைகள் தொடர்பில் அன்றைய தினம் இடம்பெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.