விக்னேஸ்வரன் மீது து.ரவிகரனுக்கு ஆதரவாக சயந்தன் பாய்ச்சல்!
வடக்கு மாகாணத்தில் அபகரிக்கப்படும் நிலங்களைப் பாதுகாக்க வெறுமனே எழுதி வாசிப்பவர்களாக அல்லது குந்தி இருந்து
அரசியல் பேசுகின்றவர்களாக இல்லாமல் தீர்வை முன்மொழிபவர்களாக இருக்க வேண்டும்.
இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் 125ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனின் நில ஆக்கிரமிப்புப் பிரேரணை மீது கருத்துக்களை முன்வைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாங்கள் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடக்கூடாது என்று விரும்புகிறோமா அல்லது பேசிப் பேசியே அரசியல் செய்ய விரும்பு கிறோமா என்பதை இந்தச் சபை முதலில் தீர்மானிக்கட்டும்.
பன்னாட்டு நீதி என்பது உடன் பரிகாரம் கிடைக்கும் நீதியல்ல. அது தாமதமாகத்தான் கிடைக்கும். அந்த நீதியை நாடுங்கள் இல்லையெனில் அது உடனடியாகப் பலன்களைத் தராது.
நிலைமாறுகால நீதியானது நிலைமாறி இன்னொரு நிலைக்கு வரட்டும். நிலப் பிரச்சினை தொடர்பில் தற்போதுள்ள பிரச்சினை, எங்களுக்கு ஒரு சுற்றுச்சூழல் திணைக்களமோ அமைச்சோ விடைகாணாது என்பதுதான். நாங்கள் காடுகளைப்பற்றி கரிசனையுடையவர்கள்.
நாட்டில் 35 வீதமான நிலத்தை காடுகளாகப் பேணுவதாக அரசு பன்னாட்டுக்கு உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
அப்படியெனில் இந்த 35 சதவீதமான காடுகள் எந்த மாகாணத்துக்குள் எத்தனை சதவீதத்துக்குள் அமைய வேண்டும் என்பதாகத்தான் அது இருக்கவேண்டும்.
காடுகள் எல்லா இடங்களிலும் இல்லை. இலங்கையில் இருக்கும் காடுகள் என்ன வகைக் குரியவை?எங்களுக்குள்ள ஆய்வுக்கான ஒதுக்கீட்டுப் பணத்தைப் பயன்படுத்தி இப்படியான ஆய்வுகளைச் செய்யவேண்டும் என்றார்.
அரசியல் பேசுகின்றவர்களாக இல்லாமல் தீர்வை முன்மொழிபவர்களாக இருக்க வேண்டும்.
இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் 125ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனின் நில ஆக்கிரமிப்புப் பிரேரணை மீது கருத்துக்களை முன்வைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாங்கள் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடக்கூடாது என்று விரும்புகிறோமா அல்லது பேசிப் பேசியே அரசியல் செய்ய விரும்பு கிறோமா என்பதை இந்தச் சபை முதலில் தீர்மானிக்கட்டும்.
பன்னாட்டு நீதி என்பது உடன் பரிகாரம் கிடைக்கும் நீதியல்ல. அது தாமதமாகத்தான் கிடைக்கும். அந்த நீதியை நாடுங்கள் இல்லையெனில் அது உடனடியாகப் பலன்களைத் தராது.
நிலைமாறுகால நீதியானது நிலைமாறி இன்னொரு நிலைக்கு வரட்டும். நிலப் பிரச்சினை தொடர்பில் தற்போதுள்ள பிரச்சினை, எங்களுக்கு ஒரு சுற்றுச்சூழல் திணைக்களமோ அமைச்சோ விடைகாணாது என்பதுதான். நாங்கள் காடுகளைப்பற்றி கரிசனையுடையவர்கள்.
நாட்டில் 35 வீதமான நிலத்தை காடுகளாகப் பேணுவதாக அரசு பன்னாட்டுக்கு உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
அப்படியெனில் இந்த 35 சதவீதமான காடுகள் எந்த மாகாணத்துக்குள் எத்தனை சதவீதத்துக்குள் அமைய வேண்டும் என்பதாகத்தான் அது இருக்கவேண்டும்.
காடுகள் எல்லா இடங்களிலும் இல்லை. இலங்கையில் இருக்கும் காடுகள் என்ன வகைக் குரியவை?எங்களுக்குள்ள ஆய்வுக்கான ஒதுக்கீட்டுப் பணத்தைப் பயன்படுத்தி இப்படியான ஆய்வுகளைச் செய்யவேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை