வவுனியாவில் அனுமதியின்றி கொண்டு செல்லபட்ட மாடு மீட்பு!

அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 5 மாடுகள் ஓமந்தைப் பொலிஸாரால் வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் வைத்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.


உரிய அனுமதிப் பத்திரங்கள் எதுவுமின்றி புளியங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சிறிய கப் ரக வாகனத்தில் 5 மாடுகள் கொண்டு செல்லப்பட்டன. இதனைச் சோதனை செய்த ஓமந்தைப் பொலிஸார் குறித்த மாடுகளை மீட்டுள்ளதுடன், வாகனத்தையும் அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் மாடுகளை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.