அர்ஜுன் அலோசியஸ்,கசுன் பலிசேனக்கு விளக்கமறியில் நீடிப்பு

அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குற்றச்சாட்டில் பெர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 12 ஆம் திகதி கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்னவிடம் அவர்களை முன்னிலைப்படுத்திய போது இன்று வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது இந்த விசாரணையில் இருவரையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.