இந்திய புதிய நோட்டுக்களை பரிசோதிக்கும் இயந்திரம் அறிமுகம் !

பனமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புதிதாக 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வழக்கத்தை விட சிறிய நோட்டுகளாக இருந்ததால், அப்போது ஏடிஎம் இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டன.

இதனால், புதிய ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. தட்டுப்பாட்டை போக்குவதற்காக அதிகளவில் 100 ரூபாய் நோட்டுகள் (தற்போது புழக்கத்தில் இருப்பவை) கூடுதலாக அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. அதன் பிறகு ஒவ்வொரு நிறத்திலும் 200, 50, 10 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

இந்த நிலையில், வெளிர் நீல நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி அண்மையில் முடிவு செய்துள்ளது. பழைய 100 ரூபாய் நோட்டுக்களை விட, இவை அளவில் சிறியதாக இருக்கும் என்பதால், நாடு முழுவதும் 2 லட்சத்து 40 ஆயிரம் ஏடிஎம் இயந்திரங்களை மாற்றி அமைக்க 100 கோடி ரூபாய் செலவாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.