நரகல் தின்னும் இழிபிறவிகள்.....!

வட்டுக்கோட்டைப்பகுதி
ஊர் உறங்க ஆரம்பித்து
இரவின் நடுநிசி முடியும் வேளை..
ஓட்டைப் பிரித்து இறங்கும் இரு திருடர்கள்..
வயது 18 இலிருந்து 24 க்குள்

இருக்கும் இளையோர்தான்..
முகமூடியில் மறைந்த முகங்கள்..
60 வயதுடைய பெண்ணும்
உடல்நலமின்றிய அவர் கணவனும்..
உறங்கிக் கொண்டிருக்க...
மிருகம் இரண்டு விழித்துக் கொண்டிருந்தது...
திடீர் அசைவாட்டங்கள்
அதிர்ச்சியில் தம்பதியர்..
கண்கள் வாய் கைகள் கால்கள் கட்டப்படுகின்றன..
இரண்டுபேர் வசிக்கும் வீடென்று
இரண்டு மிருகங்கள் குதித்தன போலும்..
பெண்கள் எல்லோருமே அம்மா அல்லவா...
பேய்களுக்கு அது தெரியுமா ஆ
அறைக்குள்தான் இழுத்துச் சென்றன..
அதிகாரமாய்ப் புணர்ந்தன...
சொன்னாலென்ன..
முன்னும் பின்னுமாய் முடித்துக் கொண்டன மூர்க்கத்தை.. ச்சே
இத்தோடு விடவில்லை..
பெண்ணுறுப்பை அறுத்துக் கிழித்தன வாளால்...
அய்யோடா.. ஆணினமே..
உனக்கு ஆசையென்ன நரகல் தின்பதா...
அனுபவித்தறிய ஆசைப்பட்ட அரக்கர்களே..
அங்கு ஓர் உயிர் வதைப்படுதலை
அறியாமல் போதை ஏற்றியிருந்தாயோ..
அத்தோடு முடிந்து போகாமல்
நகை பணம் கொள்ளையடித்தது சேர்ந்து..
வெறியாட்டம் முடிந்து பேய்கள் போயிற்று..
அப்பெண்ணின் துயர் சொல்ல முடியுமா வார்த்தைகளால்..
ஒன்றா இரண்டா இப்படி..
ஒவ்வொரு நாளும் நடக்கிறதே..
பாதுகாப்பில்லா நாடு
பார்த்துக் கொண்டிருக்கிறது சும்மா.
மக்கள் துன்புற்றால் மகிழுமா அரசாங்கம்..
பிடிப்பார்கள் பிறகு
பிணையில் விடுவார்கள்..
மீண்டும் தொடர்கதைதான்...
விட்டுக்கொடுக்கக் கூடாது..
கடும் தண்டனை கொடுக்க
கட்டம் கட்டி எடுக்கப்படுமா நடவடிக்கை..
பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்

மகிழினி காந்தன்
சுவிஸ்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.