யாழில் முகமூடி அணிந்து பாரிய கொள்ளை!

சாவகச்சேரியில் மூன்று குடியிருப்புகளுக்குள் உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்தவர்களைத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் பெண்கள், குழந்தைகள் அணிந்திருந்த தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாவகச்சேரி சங்கத்தானை, சாவகச்சேரி வடக்கு, மீசாலை மேற்கு கேணியடி ஒழுங்கை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தவர்கள் அங்கிருந்தவர்களை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு நகைகளைக் கொள்ளையிட்டுள்ளனர்.

காயங்களுக்கு உள்ளான மூவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பொலிஸார் விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.