ஐ.நா. கூட்டத்தை தவிர்க்க தீர்மானம்; பிரதமர் இம்ரான்!
பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான் தனது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில்
கவனம் செலுத்துவதற்காக எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சர் சாஹ் மெஹ்மூத் குரேஷி தெரிவித்தார்.
இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73 ஆவது கூட்டத்தொடரில் இம்ரான்கானுக்குப் பதிலாக சாஹ் மெஹ்மூத் குரேஷி தலைமையிலான தூதுக் குழுவொன்று கலந்துகொள்ளவுள்ளது.
“பிரதமர் அந்தக் கூட்டத்திற்கு செல்லமாட்டார். நான் அங்கு செல்லும் பாகிஸ்தானிய குழுவிற்கு தலைமை தாங்குகிறேன்” என சாஹ் மெஹ்மூத் குரேஷி ஊடகவியலாளர் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கூறினார்.
பாகிஸ்தானின் புதிய பிரதமர் நாடு எதிர்கொண்டுள்ள பொரு ளாதார நெருக்கடிகள் குறித்து கவனமெடுக்க நாட்டில் தங்கியி ருப்பாரா அல்லது ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் கலந்துகொள் வாரா என்ற விவாதமொன்று பாகிஸ்தானில் நிலவுகின்ற நிலையி லேயே பிரதமரின் மேற்படி தீர்மானம் தொடர்பான அறிவிப்பு வெளி யாகியுள்ளது
கருத்துகள் இல்லை