சந்துருக்கொண்டான் படுகொலை 28 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றுக் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர சபை அமர்விலும் நேற்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
1990 செப்ரெம்பர் 9ஆம் திகதி சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்த 184 அப்பாவித் தமிழ் மக்களை இலங்கை இராணுவமும், அதனோடு இருந்த ஆயுதக் குழுக்களும் இணைந்து படுகொலை செய்திருந்தன. அந்தப் படுகொலையின் 28ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன.
சத்துருக்கொண்டான் கிராமம் மட்டக்களப்பு நகருக்கு அருகே அமைந்துள்ளது. 1990 செப்ரெம்பர் 9 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில், சீருடை அணிந்த இராணுவத்தினரும், மற்றும் சில ஆண்களும் கிராமத்தினுள் நுழைந்து கிராம மக்கள் அனைவரையும் வீதியில் கூடுமாறு பணித்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள இராணுவ முகாமிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விசாரணைகள் முடிந்த பின்னர் அவர்கள அனைவரும் விடுவிக்கப்படுவர் என உறுதியளிக்கப்பட்டது. எனினும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. அங்கிருந்த தப்பியவர்களின் சாட்சியப்படி அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
படுகொலைச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தவென இரு விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஓய்வுபெற்ற நீதிபதி கே. பாலகிட்ணர் இந்த விசாரணைகளை நடத்தவென அப்போது ஆட்சியிலிருந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசால் நியமிக்கப்பட்டார்.
நீதிபதி தனது அறிக்கையில் படுகொலை நிகழ்ந்ததற்கான வலுவான சாட்சியங்கள் இருப்பதாகவும் குற்றவாளிகளுக்கெதிரான கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதுவரை இவ்வாறான சட்ட நடவடிக்கைகளோ, விசாரணைகளோ மேற்கொள்ளப்பட்டதாகத் தகவலெதுவும் இல்லை.
#batticollo #tamilnews #srilanka
மட்டக்களப்பு மாநகர சபை அமர்விலும் நேற்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
1990 செப்ரெம்பர் 9ஆம் திகதி சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்த 184 அப்பாவித் தமிழ் மக்களை இலங்கை இராணுவமும், அதனோடு இருந்த ஆயுதக் குழுக்களும் இணைந்து படுகொலை செய்திருந்தன. அந்தப் படுகொலையின் 28ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன.
சத்துருக்கொண்டான் கிராமம் மட்டக்களப்பு நகருக்கு அருகே அமைந்துள்ளது. 1990 செப்ரெம்பர் 9 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில், சீருடை அணிந்த இராணுவத்தினரும், மற்றும் சில ஆண்களும் கிராமத்தினுள் நுழைந்து கிராம மக்கள் அனைவரையும் வீதியில் கூடுமாறு பணித்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள இராணுவ முகாமிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விசாரணைகள் முடிந்த பின்னர் அவர்கள அனைவரும் விடுவிக்கப்படுவர் என உறுதியளிக்கப்பட்டது. எனினும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. அங்கிருந்த தப்பியவர்களின் சாட்சியப்படி அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
படுகொலைச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தவென இரு விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஓய்வுபெற்ற நீதிபதி கே. பாலகிட்ணர் இந்த விசாரணைகளை நடத்தவென அப்போது ஆட்சியிலிருந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசால் நியமிக்கப்பட்டார்.
நீதிபதி தனது அறிக்கையில் படுகொலை நிகழ்ந்ததற்கான வலுவான சாட்சியங்கள் இருப்பதாகவும் குற்றவாளிகளுக்கெதிரான கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதுவரை இவ்வாறான சட்ட நடவடிக்கைகளோ, விசாரணைகளோ மேற்கொள்ளப்பட்டதாகத் தகவலெதுவும் இல்லை.
#batticollo #tamilnews #srilanka
கருத்துகள் இல்லை