அவுஸ்திரேலியா இலங்கைக்கு 9 பேர் நாடு கடத்தப்பட்டது!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட 9 பேர் இன்று காலை இலங்கைக்கு வந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த 25 அகதிகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் நேற்றைய தினம் இரவு நாடு கடத்தியிருந்தார்கள்.

இவர்களில் 9 பேர் இலங்கையர்கள் என்பதுடன், அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான விசேட விமானத்தில் இவர்கள் இன்று காலை 8 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த இலங்கையர்களுடன் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகளும் விமானத்தில் வந்துள்ளதுடன், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் இலங்கையர்களை ஒப்படைத்துள்ளனர்.

நாடு கடத்தப்பட்டவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக தேசிய இரகசிய தகவல் பிரிவு மற்றும் விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 
#Austraila    #srilanka   #tamilnews   #Refugee

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.