இராணுவத் தளபதி தலைமையில் இடம்பெற்ற நீர்க்காகம் தாக்குதல் பயிற்சி!

எதிரியால் கைப்பற்றப்பட்ட பிரதேசம் ஒன்றை முழுமையாக இராணுவ நடவடிக்கை மூலம் மீட்டு எடுப்பது தொடர்பான நீர்க்காகம் தாக்குதல் பயிற்சி இன்று குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெற்றது.

இலங்கை உட்பட சர்வதேச நாடுகளின் முப்படையினரின் பங்குபற்றலுடன் கடந்த 20 நாட்களாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த பயிற்சியின் இறுதி நாள் இன்று திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெற்றது.

இலங்கையைச் சேர்ந்த 450 முப்படை அதிகாரிகளும், 10 நாடுகளைச் சேர்ந்த 22 அதிகாரிகளும், 37 வீரர்களும் இப்பயிற்சி நடவடிக்கைகளில் பங்கு பற்றியுள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மேஜர் ஜெனரல் நிஸங்க ரணவண்ணவின் முழுமையான வழிகாட்டலில் இந்த ஒன்பதாவது பயிற்சி நடவடிக்கை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த செப்டம்பர் 6ம் திகதி ஆரம்பமான இப்பயிற்சி கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்றது.


#Trincomale  #armye  #srilanka   #tamilnews

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.