முதற் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-ஜேர்மனி!

இன்று 13 .10.2018 ஜேர்மனியில் காகன் எனும் நகரத்தில் முதற்  பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி அவர்களின் 31ம் ஆண்டு நினைவெழச்சி நிகழ்வு.
தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் மக்கள் கலந்துகொண்டு தங்கள் வீர வணக்கத்தைச் செலுத்தினார்கள். அத்தோடு பல கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்று கொண்டிருக்கிறது.



நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அன்று(10.10.1987 ) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த, வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள்.

1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியிலிருந்த குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்தத் தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதித் தாக்குதல்.

புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அது தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகவும் அமைந்தது. தமிழ்த் தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வழிசமைப்பதே அவளது இலட்சியமாக அமைந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.