மலையக மக்களுக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்!

ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்குமாறு கோரி மலையக மக்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இந்தநிலையில் மலையக மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லண்டன் வாழ் இலங்கையர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.