சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் உட்பட்ட 10 மாவீரர்களி​ன் நினைவு நாள்!

ஓயாத அலைகள் - 4 நடவடிக்கையின்போது காவியமான சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும், பிற நிகழ்வுகளில் காவியமான ஆறு மாவீரர்களினதும் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

18.10.2000 அன்று ஓயாத அலைகள் - 4 நடவடிக்கையின் போது நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்ற மோதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்வேளை 23.10.2000 அன்று

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் (மாயாண்டி ஜெயக்குமார் - கோணாவில், கிளிநொச்சி)  வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

23.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மற்றொரு மோதலின்போது

கப்டன் சுதனி (பரமேஸ்வரன் ஜீவரதி - பூநகரி, கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் தூயவதனா (ரட்ணசிங்கம் ரட்ணபிரியா - மிருசுவில், யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தமிழன்பு (கணபதிப்பிள்ளை விஜயா - திரியாய், திருகோணமலை)   ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதேநாள் முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலின்போது

மேஜர் தேவன் (சந்திரசேகரம் சிறிபவான் - உடுத்துறை, யாழ்ப்பாணம்)

கப்டன் எல்லாளன் (இராசரட்ணம் இராஜ்குமார் - அரியாலை, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை புலித்தேவன் (நடராசா திருச்செந்தூரன் - முரசுமோட்டை, கிளிநொச்சி)

வீரவேங்கை நிலாகரன் (மறைமாறன்) (பொன்ராசா ரஞ்சித்குமார் - உப்புக்குளம், மன்னார்)   ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுக்காவலில் ஈடுபட்ட சிறிலங்கா படையினருடனான மோதலின்போது

மேஜர் வசீகரன் (வீரவாகு சிவராஜா - குரும்பசிட்டி, யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் மின்னல் தாக்கி

லெப்டினன்ட் பாவலன் (பாலகிருஸ்ணன் பாலமுரளி - இணுவில், யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.