சாரணர் பயிற்சி முகாம்

நுவரெலியா ஹாவாஎலிய பீட்ரூ பகுதியில் புனரமைக்கப்பட்ட
சாரணர்களுக்கான பயிற்சி முகாம் 07.10.2018 அன்று திறந்து வைக்கப்பட்டது.
கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரண குறித்த பயிற்சி முகாமை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சாரணர்களுக்கான பயிற்சிகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த பயிற்சி முகாம் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
இந்நிகழ்வின் போது இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், சாரணர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.