மஹிந்தவிற்கு மொட்டின் தலைமையை ஏற்க அழைப்பு!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநாடு இந்த வருட இறுதிக்குள் நடைபெறும் எனவும், மஹிந்த மொட்டின் தலைமையை ஏற்கும்படி கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்​தை ஏற்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அக்கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

தொடர்ந்தும் பத்தரமுல்லை நெளும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன​ பெரமுனவின் தலைமையை ஏற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிப் பறிப்போகுமா என கேள்வி வினவப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் குறித்த கேள்விக்கு அவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், அவ்வாறான பிரச்சினைகளை எவராவது ஏற்படுத்த முயற்சித்தால், அதற்கு முகங்கொடுக்கத் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.