பங்காளி சண்டையில் தலையிட விரும்பவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக
துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு கூறுவது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டனர்.

அ.தி.மு.க.வின் மற்றொரு பிரிவுதான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். இரு கட்சிகளும் பங்காளி சண்டை போடுகிறார்கள். அதில் தலையிட விரும்பவில்லை. அவர்கள் பேசிக்கொள்வதற்கு நான் பதில் செல்ல வேண்டுமா? என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

#டிடிவி தினகரன் | #அதிமுக | #ஓ பன்னீர் #செல்வம் | #அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் | #பொன் ராதாகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.