முகமாலை பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள்!

முகமாலை பகுதியில் ஆபத்தான வெடிபொருட்கள் தற்போதும் காணப்படுவதாக அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மக்கள் மீள்குடியேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தமது காணிகளை துப்பரவு செய்யும் போது ஆபத்தான வெடிபொருட்களை தாம் காணுவதாகவும் , அது தொடர்பில் உரிய தரப்பினர்களுக்கு தாம் அறிவித்து அவற்றை அகற்றி வருவதாக தெரிவித்தனர்.

இதேவேளை அப்பகுதிகளில் ஆபத்தான வெடிபொருட்கள் தொடர்பில் பொது அமைப்புக்கள் மற்றும் அரச தரப்புக்களால் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2006 ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது முன்னரங்க நிலைகளாக காணப்பட்டு இரு தரப்பினர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் இடம்பெற்ற பகுதியாகும்.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அப்பகுதிகளில் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வெடிபொருள் அகற்றும் நடவடிக்கையின் போது பெருமளவான வெடிபொருட்கள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#முகமாலை  #கிளிநொச்சி   #பொது அமைப்புக்கள்  #யுத்தம்   #வெடிபொருள்  #பச்சிலைப்பள்ளி  #jaffna #srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.