ஜனநாயகத்தினை பாதுகாக்குமாறு வலியுறுத்தி மெழுகுவர்த்தி போராட்டம்

ஜனநாயகத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி

தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு கங்காராம விகாரைக்கு அருகில் இந்த மெழுகுவர்த்திப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் நேற்றைய தினம் சிலாபம் முன்னேஷ்வரம் கோவிலில் ​தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.