சிரியா நாட்டில் அமெரிக்கா கூட்டுப்படை நடத்திய வான்வழி தாக்குதலுக்கு 43 பேர் பலி

சிரியாவில் அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.எஸ். குழுவினரும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். இவர்களை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


சிரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற அரசு படைகள் ஆகியவையும் போரில் இறங்கி உள்ளன. சிரியாவில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் குண்டுகளுக்கு இரையாகி உள்ளனர்.

இந்நிலையில், ஈராக் எல்லை அருகே டெயிர் எஸ்ஸார் மாகாணத்தில் அபு ஹசன் கிராமத்தில் வசித்து வந்த ஐ.எஸ். அமைப்பின் குடும்பத்தினர் மீது அமெரிக்க கூட்டுப் படையினர் இன்று வான்வழி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் ஐ.எஸ். உறுப்பினர்களின் 17 குழந்தைகள் உள்பட 36 பேர் பலியாகினர். மேலும், பலியான 7 பேர் பொதுமக்களா அல்லது ஐ.எஸ். அமைப்பினரா என அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து அமெரிக்க கூட்டுப் படையினர் கூறுகையில், பொதுமக்கள் பலியை தடுப்பதில் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.