தேரர்கள் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை தாக்குதல் – உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு!

தேரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொள்ள உத்தரவிட்டவர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பொதுபல சேன அமைப்பினர் இன்று (திங்கட்கிழமை) மகஜர் ஒன்றை வழங்குவதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொண்ட விடயம் தொடர்பில் ஜனாதிபதி தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
குறித்து தேரர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடிய ஜனாதிபதி ஞானசார தேரரின் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தேரர்களினால் வழங்கப்பட்ட மகஜரையும் பெற்றுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.