மகிந்தவுக்கு ரணில் விடுக்கும் சவால்

பாராளுமன்றத்தில் பிரேரணைகள் கொண்டு வரப்படும் போது முடிந்தால் அதனை தோற்கடித்துக் காட்டுமாறு மகிந்த ராஜபக்‌ஷவுக்கு சவால் விடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க சவால் விடுத்துள்ளார்.

அவ்வாறு அதனை செய்யாது பாராளுமன்றத்தில் குழப்பத்தில் ஈடுபடுவார்களாக இருந்தால் அவர்களுக்கு பெரும்பான்மை இல்லையென்பதனை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகிவிடுமெனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று அலரிமாளிகையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சி தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.