இந்துமத திணைக்கள உறுப்பினர்களுக்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்குமிடையில் சந்திப்பு

இந்துமத திணைக்களத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கும், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது
நேற்று(வெள்ளிக்கிழமை) அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் இந்துமத விவகாரங்கள் தொடர்பில் திணைக்களம் எடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் இதன்போது கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்த தமது ஆலோசனைகளையும் அமைச்சர் இதன்போது முன்வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.