A/L பரீட்சைப் பெறுபேறு நாளை வெளியிடப்படவுள்ளது

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை நாளை(ஞாயிற்றுக்கிழமை) வெளியிட எதிர்ப்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.



உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெறுபேறுகளை WWW.DONETS.LK என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிடுவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைகளுக்காக 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.

நேற்றைய தினம் குறித்த பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.