மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு -யேர்மனி முன்சன்

 யேர்மனியின் முன்சன் மாநிலத்தில்01.12.2018 தேசிய மாவீரர் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு இடம்பெற்றது.வழமை போல் இவ்வருடமும்
நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தது குறிப்பிடத் தக்கது. இவ் நிகழ்வானது முன்சன் மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மண்டபத்தில் மாலை 4 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. பொதுச்சுடர் . தேசியக்கொடி ஏற்றப்பட்டு  இந்நிகழ்வில் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றப்பட்டு மாவீரர்களுக்கான மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்நிகழ்வாக கலைநிகழ்வுகள் இடம்பெற்றது  இசைவணக்க நிகழ்வினை முன்சன் மாநகர தமிழ் இளையவர்கள் சிறப்பித்தார்கள். தொடர்ந்து திரு. கவிமகன் எழுதிய “பகிரப்படாத பக்கங்கள் “ நூல் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.  நடன நிகழ்வுகளுடன் மாவீரர் வணக்க நிகழ்வுகள் .இனிதே நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.