இரசாயனக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை சர்வதேசவிசாரணையில் உறுதிப்படுத்தவும்!

விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இரசாயன குண்டுகள் பொதுமக்கள் மீது
பயன்படுத்தப்பட்டமைக்கான சகல ஆதாரங்களும் உள்ளன. அரசாங்கம் இரசாயன குண்டுளை பயன்படுத்தவில்லை என்றால் சர்வதேச விசாரணையில் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். பாராளுமன்றம் இன்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைவமையில் கூடியது.

சபை ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்ற பின்னர் இரசாயன ஆயுதங்கள் சமவாய (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த மண்ணில் இரசாயன குண்டுகள் பாவிக்கப்பட்டுள்ளன. அதனை முடியுமானால் மறுத்துக்காட்டுங்கள். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை ஏன் மனிதாபிமான கண்களில் பார்க்கக்கூடாது?

நாட்டில் ஸ்தீரமான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்திருக்கின்றது. தமிழரின் பிரச்சினைக்கு முறையான தீர்மானம் ஒன்றை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையிலே அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்துக்கு வாக்களித்திருக்கின்றோம்.

 எனவே யுத்தக்குற்றத்துக்கு சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற்றால்தான் முறையான தீர்வொன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையே எங்களுக்கு இருக்கின்றது. யத்தத்தின்போது இரசாயன குண்டுகள் பாவிக்காவிட்டால் அரசாங்கம் அச்சமின்றி சர்வதேச விசாரணைக்கு முகம்கொடுக்க முன்வரவேண்டும் என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.