நெடுங்கேணியில் போலி காசுத்தாள்கள் புழக்கத்தில்!

வவுனியா நெடுங்கேணியில் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான போலி தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது,
நேற்று இரவு நெடுங்கேணி பொலிஸார் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை சந்தேகத்திற்கு இடமான ஒரு நபரினை சோதனை செய்துள்ளனர். இதன் போது குறித்த நபரிடம் இருந்து 5000 ரூபாய் தாள்கள் 18ம் 1000 ரூபாய் தாள்கள் 10 அடங்கலாக ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கள்ள நோட்டுக்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் குறித்த நபரை வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா நெடுங்கேணி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.