இலங்கைக்கு பங்களாதேஷின் விசேட விசாரணை குழு வருகை!

பங்களாதேஷின் விசேட பொலிஸ் விசாரணைக்குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது.



தெஹிவளையில் பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காகவே இந்த குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண்ணை கைது செய்யும் வகையில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெறும் நோக்கிலேயே குறித்த பொலிஸ் குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சார்க் நாடுகளில் போதைப்பொருள் குற்றங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களும் இந்த குழுவில் அங்கம் வகிப்பதாக பொலிஸ் போதைப்பொருள் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலக் தனபால சுட்டிக்காட்டியுள்ளார்.

278 கிலோகிராம் ஹெரோயினுடன் பங்களாதேஷ் பிரஜைகள் இருவர் கடந்த மாதம் 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

3000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி வாய்ந்த குறித்த ஹெரோயின் தொகையானது, கடந்த வருடத்தில் கைப்பற்றப்பட்ட அதிகூடிய ஹெரோயின் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.