வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் கோழிக்கழிவுகளால் துா்நாற்றம்!

வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் வீசப்பட்டுள்ள குப்பைகளில் கோழிக்கழிவுகள் வீசப்பட்டு காணப்படுகின்றன. இதனால் வர்த்தக நிலையங்களில் துர்நாற்றம் வீசிவருகின்றதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

 குப்பை வாளியில் வீசப்பட்டுள்ள குப்பைகளில் இவ்வாறு கோழிக்கழிவுகள் வீசப்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலையப்பகுதியிலுள்ள வியாபார நிலையங்களில் துர்நாற்றம் வீசிவருகின்றது. பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிக்கு வருபவர்களும் இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகிவருகின்றனர். நகரசபை ஊழியர்கள் குப்பை வீசுவதற்கு வாளிகளை வைத்துள்ளபோதிலும் அதனை மூடிவைப்பதில்லை என்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo #Vavuniya #Busstand

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.