சுமந்திரனின் அரசியல் இதுவா!!

மாத்தையாவையும் இரு நூறு போராளிகளையும் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் தான் சுட்டுக் கொன்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.


அண்மையில்,  முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சயந்தன், விடுதலைப் புலிகள் ஜனநாயக உரிமைகளை மீறினர் என்றும் தமிழர் தரப்பையே அவர்கள் கொலை செய்தனர் என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் புலிகளோடு டீலிங் நடைபெற்றதாகவும் பேசியிருந்தார்.

9ம் திகதி இடம்பெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில்,  சாள்ஸ் நிா்மலநாதன், சி. சிறிதரன் ஆகியோா், இவ்விடயம் தொடா்பாக விவாதித்தபோதே, சயந்தனுக்குச் சாா்பாக  சுமந்திரனால் இக்கருத்து கூறப்பட்டது. தமிழ் மக்களுக்கான பணிகள் எத்தனையோ இருக்க, அதையெல்லாம் விட்டுவிட்டு சுமந்திரன், புலிகளின் விவகாரம் பற்றி பேசிக்கொண்டிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான வன்மத்தைக் கக்கும் விதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இருப்பவர்களே இதுபோன்று கருத்துக்களை வெளியிட்டு, புலி நீக்க அரசியலைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும், இது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை மடைமாற்றும் செயலாக அமைந்து வருவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தைக் காப்பாற்றும் நடவடிக்கையிலும், அதேநேரம் புலிகளையும் போர்க் குற்றவாளிகளாகக் காட்ட வேண்டிய தேவையும் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தற்போது ஏற்பட்டிருப்பதாகவும்  கூறப்படுகின்றது.
அந்த  வகையில் முன்னின்று உழைப்பவராக திர. சுமந்ததிரன் அவா்களே காணப்படுகின்றாா்.  மக்களின் மனஓட்டம் புரியாத சுமந்திரன், ஒருசிலரை வைத்து எல்லோரையும் கணக்கிட்டுவிடுகின்றாா்.  இவரது இந்த சாணக்கியத்தின் பின் என்ன மா்மம் உள்ளது என்பதே ஆச்சரியமாக உள்ளது.

ஒன்று மட்டும் உண்மை,  தமிழா்களின் ஆயுதப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும்,  செயல்கள் காலத்தால் மன்னிக்கமுடியாத ஒன்றாகும்.  துரோகத்தனங்கள் அதிக காலம் நிலைப்பதில்லை என்பதுடன், விடியலின் துாரமும் அதிகமில்லை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.