இலங்கையின் பல அரச தலைவர்களுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு!

இலங்கையின் பல அரச தலைவர்களுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


உலகில் எந்தவொரு நாட்டின் அரச தலைவர் மீதும் சுமத்தப்படாத மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றச்சாட்டு இலங்கையின் அரச தலைவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான ஆர்.பிரேமதாஸ, சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச , முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீதே போர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

போர்க்குற்ற பட்டியலில் சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, முன்னாள் பிரதமர்களான SWRD.பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டார நாயக்க மீதும் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களின் இவ்வாறான போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் விரைவில் ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள இவ்வாறான தகவல்களை தென்னிலங்கை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.